Friday, April 17, 2026
Homeட்ரெண்டிங்பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் 

பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் 

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகைக்கான மூன்று மாத தொகையை முன்கூட்டியே வரவு வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.

அவர் வெளியிட்டுள்ள x தள பதிவில், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! 

#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி #வெல்வோம்_ஒன்றாக!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments