வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மகளை எதிர்கால வாரிசாகத் தேர்வு செய்துள்ளதாக தெற்கு கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS) நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெற்கு கொரிய புலனாய்வு அமைப்பின் மதிப்பீட்டின்படி, கிம் ஜாங் அன் தனது இளைய மகளை அதிகாரப்பூர்வ வாரிசாக முன்னிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் முக்கிய இராணுவ நிகழ்வுகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் அரசியல் விழாக்களில் தனது மகளை பொதுமக்கள் முன் அறிமுகப்படுத்தி வருவது இதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அவரது மகள் “கிம் ஜூ ஏ” (Kim Ju Ae) என அழைக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தற்போது அவர் சுமார் 13 வயதாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. வட கொரியாவின் ஆட்சி மரபு குடும்ப பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டதானதால், இது கிம் குடும்பத்தின் நான்காவது தலைமுறை ஆட்சிக்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

எனினும், இதுவரை வட கொரியா அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேசமயம், கிம் ஜாங் அன் தலைமையிலான Workers’ Party மாநாட்டில் இந்த வாரிசு விவகாரம் தொடர்பாக தெளிவான அறிவிப்பு வெளியாகலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த முன்னேற்றம் கொரிய தீபகற்பத்தின் எதிர்கால அரசியல் நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.




